Saturday, March 8, 2014

அறுபத்தைந்தாம் கலை



காலை ஆறு மணிக்கே அவன் வந்து நிற்பான் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.

அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து விடும் வழக்கமுள்ளவர் அவர். தெளிவான சிந்த னையுடனான எழுத்துப் பணிக்கும் ஆழ்ந்த வாசிப்புக்கும் அமைதியான காலை வேளை மிகவும் பொருத்தமானது. காலைத் தேனீரோடு எழுத்தையும் வாசிப்பையும் அவர் எட்டு மணி வரை மேற்கொண்ட பிறகுதான் அடுத்த வேலை களைக் கவனிக்கப் பழகியிருந்தார்.

அவனது வருகையால் அவருக்கு மிகவும் விருப்பமான அந்த இரண்டு மணிநேரம் இழக்கப்பட்டு விட்டது என்று எண்ணிக் கொண் டார். வீட்டுக்கு வந்தவரை வாசலில் நிறுத்த முடி யுமா? அவனை உள்ளே அழைத்தார்.

000

'நம்மால் கடந்த காலங்களில் கைவிடப் பட்டவற்றை மட்டுமே அருகிவரும் கலைகள் எனக் கருதி வருகிறோம். இந்தக் கருத்தே பிழையானது. ஆய கலைகள் அறுபத்து நான்கு என்று சொல்லப் படுகிறது. அவை என்னவென்று கூட நாம் தெரிந்து வைத்திருக்கவில்லை' என் றார் பேச்சாளர்.

'வசியக் கலை பற்றி நீங்கள் ஓரளவு அறிந்து வைத்திருக்கிறீர் கள். அது குறித்து நானும் பல விடயங்களைப் படித்திருக்கிறேன். இதற்கு மாந்திரீகம் என்றும் சொல்லப்படுகிறது. வாராந்திரிகளில் இக்கலையை அடிப்படையாகக் கொண்ட பல விளம்பரங்களை நீங்கள் பார்க்க முடியும். இந்த விடயத்தில் எனக்கும் ஓரளவு பரிச்சயம் உண்டு. இங்கேயிருக்கும் பெண்களில் யாராவது ஒருவர் முன்வருவாராக இருந்தால் நான் எனது பேச்சை முடித் துச் செல்லுகையில் அவரை என் பின்னால் வரச் செய்ய என் னால் இயலும்.'

வயதான பெண்கள் நான்கு பேர் ஆங்காங்கே உட்கார்ந்திருந் தார்கள். பேச்சாளரின் வயதொத்த முப்பது பேரளவில் ஆண்கள் அங்கி ருந்தார்கள். அவர்களில் சிலர் அப் பெண்களை ஒரு முறை சின்னச் சிரிப்புடன் திரும்பிப் பார்த்துக் கொண்டார்கள். பேச்சாளரையே பார்த்தபடி இருபத்தேழு அல்லது முப்பது வயது மதிக்கத் தக்க இளைஞன் ஒருவன் தனியே பின்னால் அமர்ந்திருந்தான்.

சவால் விட்டு அவர் பின்னால் போக வேண்டி வந்தால் மானக் குறைவாகிவிடும் என்ற பயத்தில் அல்லது தனது பேச்சுக்குச் சுவையூட்டப் பேச்சாளர் குசும்புத்தனம் பண்ணுகிறார் என்ற என்ற எண்ணத்தில் எது வுமே காதில் விழாதது போல் பெண்கள் அமர்ந்திருந்தார்கள்.

'பேச்சாளரே அறுபத்தைந்து வயது தாண்டியவர், இவர் பின்னால் போய் என்னதான் ஆகப் போகிறது' என்ற எண்ணம் கூட அவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். பேச்சாளர் தொடர்ந்தார்....

'அணிமா மகிமா இலகிமா
அரிய கரிமா பிராத்திமலப்
பிணிமா சுடையோர்க் கடைவரிய
பிராகா மியமீ சத்துவமெய்
துணிமா யோகர்க் கெளியவசித்
துவமென் றெட்டா மிவையுளக்கண்
மணிமா சறுத்தோர் விளையாட்டின்
வகையா மவற்றின் வகையுரைப்போம்'

என்று திருவிளையாடற் புராணத்தில் ஒரு பாடல் வருகிறது. இந்தப் பாடல் சொல்வது என்ன? இந்தப் பாடல் அட்டமா சித்தி களைப் பற்றிப் பேசுகிறது. இந்த எட்டுச் சித்திகளும் மாபெரும் கலைகள். 'அணிமா' என்பது பூதவுடலை அணுப் போன்று சிறியதாக்குதல். 'மகிமா' என்பது உடலை மலை போன்று பெரிய தாக்குதல். 'இலகிமா' என்பது காற்றைப் போல இலகு வாக்குதல். 'கரிமா' என்பது பளுவாக்குதல். 'பிராப்தி' என்பது அனைத் தையும் ஆளுதல். 'வசித்துவம்' என்பது யாரையும் வசியப் படுத்துதல். 'பிராகாமியம்' என்பது கூடுவிட்டுக் கூடு பாய்தல். 'ஈசத்துவம்' என்பது விரும்பிய எதையும் செய்து அனுபவித்தல்.

இதிலே வசித்துவம் என்பதைத்தான் நான் முதலில் பேச்சுக்குச் சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சொன்னேன். தவிர வசியம் என்பதை நாம் இன்றும் நம்புகிறோம். இன்றைய மக்கள் சமூகம் அதைப்பற்றி அறிந்து வைத்திருக்கிறது. அதற்குக் காரணம் ஆசை. அடைய முடியாததை அல்லது சிரமப்பட்டு அடைய வேண்டியதை இலகுவாக அடைந்து விடும் பேராசை. வசியம் செய்வதாக இன்றும் பலர் பிரகடனப்படுத்திக் கொண்டு காசு பார்த்து வருகிறார்கள். அது சாத்தியப்படுகிறதா இல்லையா என்பதல்ல, எனது தலைப்புக்குரியது. இவ்வாறான அற்புதமான கலைகள் அன்று இருந்தன என்பதுதான்.'

இம்மாதிரித் தலைப்புக்களில் வெகு அபூர்வமாகவே உரைகள் இடம் பெறுகின்றன என்று அவனுக்குத் தோணியது. தன்னைத் தவிர இளைய வயதுக்காரர்கள் யாரும் இக்கூட்டத்துக்கு வருகை தராதது அவனுக்குக் கவலையாக இருந்தது.

அவர் தொடர்ந்தார்.

'பாருங்கள். எப்பேர்ப்பட்ட உன்னதமான கலைகள் இவை. இலகுவில் யாருக்கும் சித்திக்காதவை. இவற்றைப் பெற்றுக் கொள்ள மிகுந்த பிரயாசையும் அர்ப்பணிப்பும் தியாகமும் உழைப்பும் தேவை. சக்தி வாய்ந்த எதுவும் மிகச் சாதாரண மாக மனிதனுக்குக் கிடைத்துவிடுவதில்லை.

உலகத்தில் எதை வேண்டுமானாலும் சாதித்துக் கொள்ளக் கூடிய அற்புதமான சக்தியுள்ள கலைகள் இவை. பொறாமை, காழ்ப்பு ணர்வு, பேராசை மற்றும் எல்லாம் தன்வசமே இருக்க வேண் டும் என்கிற ஆதிக்கவுணர்வு ஆகியவற்றை அடியோடு அகற்றி விட்டுத்தான் இக்கலைகளைப் பெற்றுக் கொள்ளப் போராட வேண்டும். தனது புலன்களை அடக்கி ஒடுக்கி, புலன்களாலும் உணர்வுகளாலும் ஆட்டிப் படைக்கப் படாத மனதைப் பெற்றுக் கொண்டே இவற்றையடைய முயல வேண்டும்.'

அவன் கூட்டத்தின் பின்னாலிருந்து எழுந்து கையை உயர்த்தினான்.

பேச்சாளர், 'என்ன' என்பது போல் அவனைப் பார்த்தார்.

'புலன்களை அடக்கி விட்டு உலோகாயுத ஆசைகளை ஒழித்து விட்டு இக்கலைகளைப் பெற்றுக் கொள்வதில் என்ன லாபம் இருக்கிறது?' அவன் கேட்டான்.

'நல்ல கேள்வி. நீங்கள் இன்னும் இன்றைய உலகத்தில் - ஆசை யும் வன்மமும் கொண்ட உலகத்தில் நின்றபடி இந்தக் கேள் வியைக் கேட்கிறீர்கள். இந்தக் கலைகளைப் பெற்றுக் கொள்வது பிறன் மனை நாடலுக்கோ, தனக்குப் பிடிக்காதவனை நோவினை செய்வதற்கோ, நாட்டை ஆள்வதற்கோ, உலகத்தின் செல்வங் களையெல்லாம் நாமே வைத்து அனுபவிப்பதற்கோ அல்ல.

தன்னலம் அறுத்து மற்றோருக்கு அன்பும் கருணையும் செய்வ தற்காக. அதுவே நித்தியமானது. உன்னதமிக்கது. சாஸ்வத மானது. மட்டற்ற சந்தோஷத்தைத் தருவது. ஆத்மாவின் அள விட முடியாப் பசியைத் தீர்க்க வல்லது.

குறுக்கு வழியில் மனிதன் இவற்றை அடைந்து விட முடியாது. அவ்வாறு உலோகாயுத சுய நன்மைகளுக்காகக் குறுகிய வழியில் இவற்றைப் பெற முடியுமாக இருந்தால் பலரும் இவற்றை அடை யப் பெற்றிருப்பார்கள். எல்லோரும் குட்டிக் கடவுள்களாக உலா வருவார்கள். அப்படியானால் இன்றை மனித குலத்தின் கதி எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.'

அவன் அமர்ந்தான். பேச்சாளர் தொடர்ந்தார்.

'இந்தக் கலைகளில் வசியக் கலை பற்றி நாம் எல்லோரும் அறிந்திருப்பதால் அதைப்பற்றிப் பேசுவது ஓர் அற்ப எதிர் பார்ப்பை மனதுக்குள் ஏற்படுத்தக் கூடியது. நம்மால் செய்யச் சாத்தியப்படாததை நாம் யார் மூலமாவது பெற்றுக் கொள்ள விழைகிறோம். இதனால் இக்கலையின் பெயரால் பலர் ஏமாற்றப் படுகிறார்கள். நான் முன்னர் குறிப்பிட்ட மற்றைய கலைகளைக் கொண்டு யாரையும் ஏமாற்ற முடியாது. அவை மக்கள் கண் முன்னே நேரடியாகச் செய்துகாட்ட வேண்டிவை என்பதால் இவற்றைப் பற்றிப் பேசுவாரில்லை.

தாயுமான சுவாமிகளின் பாடல் ஒன்றை இந்த இடத்தில் நான் எடுத்தாள விரும்புகிறேன். அவர் சொல்லும் விடயங்களை அவதானியுங்கள்.

கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்
கரடி வெம்புலி வாயையுங்
கட்டலாம் ஒருசிங்க முதுகின்மேற் கொள்ளலாம்
கட்செவி யெடுத் தாட்டலாம்
வெந்தழலின் இரதம் வைத்து ஐந்துலோகத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்
வேறொருவர் காணாமல் உலகத் துலவலாம்
சந்ததமும் இளமையோடிருக்கலாம் மற்றொரு
சரீரத்திலும் புகுதலாம்
சலமேல் நடக்கலாம் கனல்மேல் இருக்கலாம்
தன்னிகரில் சித்தி பெறலாம்
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற
திறன் அரிது சத்தாகியென்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே!

இங்கே குறிப்பிடப்படுகின்ற செயல்கள் எவையும் வெறுங் கற்ப னைகள் அல்ல. ஒரு காலத்தில் நடந்தவை. தற்போதும் இவற்றில் ஏதாவது ஒன்று வெகு அபூர்வமாக நடந்து கொண்டிருக்கலாம். நமது கண்காணா இடத்தில் சித்தர்களும் யோகிகளும் தமது புலன் அடக்கியாளும் வல்லமையால் இவற்றை அடைந் திருக்கலாம்.

பிராகாமியம் என்ற கூடுவிட்டுக் கூடுபாய்தல் ஒரு சுவாரஸ்யமான விடயமாக இருக்கிறது. இறந்த ஒரு உடலில் தனது ஆத்மா வையும் உயிரையும் உட்புகுத்தி நடமாடுவதைக் கூடுவிட்டுக் கூடுபாய்தல் என்று அழைக்கிறார்கள். திருமூல நாயனார் கூடு விட்டுக் கூடுபாய்ந்தார் என்று வரலாறு சொல்கிறது.'



பேச்சாளர் தொடர்ந்தார்.

நிகழ்ச்சி முடிந்ததும் பலரும் அவரைச் சூழ்ந்து கைலாகு செய்தார் கள். சிலர் சின்னச் சின்னக் கேள்விகளைக் கேட்டார்கள். பதிலிறுத்துக் கொண்டே கலைந்து செல்பவர்கள் மீது பார்வையைச் செலுத்தினார் பேச்சாளர். பெண்கள் வேகமாக வெளியேறியதை அவதானித்ததும் அவர் தனக்குள் சிரித்துக் கொண்டார்.

000

தனது ஜோல்னாப் பையைத் தோளில் அணிந்து கொண்டு வெளியேற எத்தனித்த போது அவரது கையைப் பிடித்து 'சேர்' என்றான் அவன்.

'கூடு விட்டுக் கூடு பாய்தல் உண்மையெண்டு நம்புகிறீங்களா?' என்று கேட்டான்.

'ஆமா' என்று சொன்னவர் 'நாம நடந்துக்கிட்டே பேசுவமா?' என்று அவனைக் கேட்டார்.

'சரி' என்றான், அவன்.

'நீர் மேல் நடக்கிறது, நெருப்புக்குமேல நடக்கிறது, மிருகங் களைக் கட்டுப்படுத்துறது, எதிரியை நிலை குலைய வைக்கிற தெல்லாம் நடந்திருக்கு. வயசானவங்க தங்கட காலத்தில நடந்த எத்தினையோ கதைகளச் சொல்லியிருக்காங்க. நான் அவங்க கிட்டயிருந்து கேட்டிருக்கன். அப்பிடியெண்டா இதுவும் நடந்திருக்கும்.' என்றார்.

'அறிவு விருத்தி கண்ட இந்தக் காலத்துல யாரும் இந்த விடயங் கள்ல ஏன் சேர் கவனம் செலுத்தல்ல?'

'இது வேகமான காலம் தம்பி. எல்லாமே உடனடி வாழ்க்கையாப் போயிட்டது. இந்தக் கலைகளக் கற்கிறது லேசான வேல இல்ல. முதலாவது நல்ல ஒரு குருவக் கண்டு பிடிக்கணும். இப்ப குருவுக்கு எங்க போவம்? அப்பிடியே ஒருத்தரக் கண்டாலும் அவரு நல்ல குருவா போலிக் குருவா என்கிறது வெளங்குறத் துக்கே அஞ்சு வருஷம் போகும். அது மட்டுமில்லாம வருஷக் கணக்குல புலன்கள அடக்கி வாழ இந்தக் காலத்தில யாருமே தயாரில்ல.'

'விஞ்ஞான ரீதியாக இந்த விடயத்தை யாரும் அணுக வில்லையா?'

'அந்த அளவுக்கு நான் தேடல்ல. ஆனா, உளவியல் ரீதியாகப் பாத்தால் நாம் காணும் கனவுகளும் கூட ஒரு வகையில் கூடு விட்டுக் கூடு பாய்தலின் ஒரு சிறு அங்கந்தானோ என்டு எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு.'

'எனக்கு விளங்கல்ல...'

'சில வேளைகள்ல விசித்திரமாக் கனவு காணுறமில்ல... உதார ணமா... எப்பவோ எங்கேயோ கண்ட ஒரு அழகான பெண் ணோட சம்பந்தப்படுத்தி இல்லயெண்டா விசித்திரமான செயல் கள்ல நாம் ஈடுபடுறமாதிரி... நாம வாழ்க்கையில் நடக்காது என்கிற விடங்கள் நடக்கிறமாதிரி....வெளியே சொல்ல முடியாத உள்ளக் கிடக்கைகள்தான் இப்பிடிக் கனவா வாறதா உளவியல் அறிஞர் கள் சொல்றாங்க. இதெல்லாங்கூட கூடுவிட்டுக் கூடு பாய்றத் தோட சம்பந்தப்பட்டதோ என்று எனக்கு தனிப்பட்ட முறையில ஒரு சந்தேகம் இருக்கு...'

பிரதான தெருவுக்கு வந்ததும் அவரது தொலைபேசி இலக்கத் தைப் பெற்றுக் கொண்டவன், இதுபற்றித் தொடர்ந்தும் கதைக்க விரும்பு வதாகச் சொல்லியபடி விலகிப் போனான்.

000

ஐந்து தினங்களுக்குப் பின் அவரது தொலைபேசிக்குத் தொடர்பு கொண்டு பேசினான்.

திருமூல நாயனார் இடையனின் உடலுக்குள் நுழைந்ததைப் படித்ததாகச் சொல்லி விட்டு இடையனின் மனைவியை ஏன் அவர் மனைவியாகக் கொள்ளவில்லை என்று கேட்டான்.

'அப்படி அவர் செய்திருந்தால் அவர் திருமூலநாய னாராக இருக்க முடியாதே' என்று சொல்லிச் சிரித்தவர்,

'இந்த ஒரு வி;டயத்திலிருந்தே அந்தக் கலைகளைப் பயன் படுத்தும் மனிதனது பக்குவம் எப்படியிருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டு;ம.; உலோகயுத நோக்கங் களுக்காக இக்கலைகளைக் கற்று அவற்றைப் பயன்படுத்த ஆரம்பித்தோமானால் நாம் எதிர்பாராத ஆபத்துக்களை எதிர் கொள்ளவும் நேரலாம்' என்று சொன்னார்.

நேற்றிரவு கனவில் நடிகை ஏஞ்சலினா ஜூலி தன்னை ஆரத் தழுவி அழைத்துச் சென்றதாக அவன் வியந்து சொன்ன போது அவர் சத்தமிட்டுச் சிரித்தார்.

'அப்பிடியெண்டா நீங்க கூடுவிட்டுக் கூடு பாய ஆரம் பிச்சிட்டீங்க' என்று அவனைக் கிண்டலடித்தார்.

அவன் மலர்ந்து சிரிப்பதை அவனது சிரிப்புச் சத்தத்தில் அவரால் உணர முடிந்தது.

பழைய இலக்கியங்களையும் இந்தக் கலைகள் குறித்த நூல் களையும் தேடிக் கொண்டிருப்பதாக அவருக்குச் சொன்னான்.

இந்தக் காலத்திலும் இவ்வாறான விடயங்களில் ஆர்வம் கொள் ளும் ஓர் இளைஞனைக் கண்டதே அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இன்றைய இளைஞர்கள் புதிய கோணங்களில் அவற்றை ஆராய்ந்து புதிய தகவல்களை வெளிக் கொணர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று நினைத்தார். தனது உரைக்குக் கிடைத்த ஒரு சிறிய வெற்றியாகவும் அவர் கருதினார்.

000

உள்ளே வருமாறு பல முறை அழைத்தும் அவன் எதுவும் கேட்காதவனைப் போல் நின்றிருந்தான்.

அந்த அதிகாலையிலும் அவன் மேலுடை வியர்வையால் நனைந்திருந்தது.

சிந்தனையும் சந்தேகமும் மேலிட்டவராகப் படியிறங்கி அவனை அவர் தட்டி அழைத்தபோது,

பதட்டத்துடன்,

'சேர் ... நான் நேற்றிரவு செத்துப் போனேன்' என்றான்.



18.05.2010
(விரல்களற்றவனின் பிரார்த்தனை என்ற எனது சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள சிறுகதை)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: